"மெஸ்ரோ அமைப்பின் ஆளுமைக்கான இளைஞர்கள் தலைமைத்துவ செயலமர்வு"


மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் வலிமையான சமூகத்திற்கு ஆளுமையான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவ செயலர்வுகள் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை தொகுதி இளைஞர்களுக்கு ஒருநாள் செயலமர்வு நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி, பதில் நீதவான் ஏ.எம்.நசீல் தெரிவித்தார்.

இதன் முதல்கட்ட செயலமர்வு சம்மாந்துறை தொகுதி இளைஞர்களுக்கு நாளை (04) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை மஜீத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இச்செயலமர்வில் சம்மாந்துறை, சென்றல் கேம்ப, சவளக்கடை, கொலணி, இறக்காமம், வரிப்பெத்தான்சேனை, வாங்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கலாநிதி ஏ.எம்.பாசில், கலாநிதி ரவூப் செய்ன், உளவளத்துறை வைத்தியர் எம்.சறாப்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நாட்டின் முரண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் வகிபாகம், போதையற்ற இளைய தலைமுறை எனும் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதி இளைஞர்களுக்கான செயலமர்வுகள் இம்மாதம் 9ம், 10ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -