ஹஸ்பர் ஏ ஹலீம்-
காணி உறுதிப்பத்திரத்தை ஒரு நாள் சேவை ஊடாக கணணிமயப்படுத்தும் நிகழ்வு மாவட்ட பதிவாளர் சமன் குமார தலைமையில் நேற்று (16) திருகோணமலை பதிவாளர் திணைக்களத்தில் இடம் பெற்றது.
ஒரு நாள் சேவை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வினை சட்டத்தரணி துஷ்யந்தன் ஆரம்பித்து வைத்தார்.
எதிர்காலத்தில் துரிதமாக கணணிமயப்படுத்தப்பட்ட ஒரு நாள் சேவை மூலமாக பெற்றுக் கொள்ள முடியுமென எதிர் பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரின் ஒருங்கினைப்புச் செயலாளர் எம்.பி.எம்.முஸ்தபா, கிழக்கு மாகாண சபை சட்டப் பிரிவின் சட்டத்தரணி அனீப் லெப்பை உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.