குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு

அப்துல்சலாம் யாசீம்-
னுராதபுரம்-ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (02) சுத்தமான குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
"காரணம் அறியப்படாத நீண்ட கால சிறுநீரக நோய் பரவலை மட்டுப்படுத்தல் திட்டம்" திட்டத்தின்கீழ் இன்றைய தினம் ஹொரவ்பொத்தான - கடவத் றத்மலை கிராமத்தில் முதன் முதலாக 2266040/= ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தினை திறந்து வைத்தார்.

இதேவேளை இன்றைய தினம் பத்தாவ, கிவுளக்கட, மதவாச்சி, கஹடகஸ்திகிலிய மற்றும் நாச்சியாதீவு போன்ற பகுதிகளில் இக் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஐக்கிய தேசிய கட்சி ஹொரவ்பொத்தான தொகுதி அமைப்பாளருமான பீ. சஹீது, அரசியல் தலைவர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -