“அநாதையாகும் மூன்றாம் தேசியம் ” ஜெனியாவில் ஆரத்தழுவ யாருமில்லையா ?


சுஐப் .எம் . காசிம்-
ஜெனீவா அமர்வின் ஆரம்பம் மீண்டும் இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட பக்கங்களை திரை விலக்கஆரம்பித்துள்ளன. ராஜபக்ஷ நிர்வாகத்தை தோற்கடித்து ஆட்சி, அதிகாரத்க் கைப்பற்றும் முயற்சிகளில் பலதடவைகள் சறுக்கி விழுந்த ஐக்கிய தேசிய கட்சி, கடைசி சந்தர்ப்பத்தில் கையாண்ட யுக்தியே சர்வதேசத்தின்தலையீடாகும். நாட்டின் சகல தொழிற் சங்கங்கள்.பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து 2015இல் ஏற்படுத்திய மிகப்பெரிய அரசியல் கூட்டே, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது. இல்லா விட்டால் இன்னும்இருபது வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சட்ட ஆட்சியும், கடும்போக்கு கெடுபிடிகளும் தொடர்ந்திருக்கும்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் சிறுபான்மைக் கட்சிகள் உட்பட பல அமைப்புக்களை ஒன்று திரட்டியமைசர்வதேசத்தின் சாதனை மட்டு மல்ல. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெற்கில் விழிப்படைந்த,அல்லது விழிப்படைய வைக்கப்பட்ட பௌத்த கடும் போக்கும், ஐக்கிய தேசிய முன்னணியைப் பலப்படுத்தியது.குறிப்பாக தமிழர்களும், முஸ்லிம்களும், மஹிந்தவின் போக்கினால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்புற்றசிங்களவர்களும் ஆட்சிமாற்றத்துக்கு அணி திரண்டனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கம்,சர்வதேசத்தின் வலைப்பின்னலை மீறிச் செயற்படமுடியாதிருந்தது.இலங்கை அரசாங்கம் தங்களுக்கான கைம்மாறுகளை இன்னும் சரியாகச் செய்யவில்லை என்றசர்வதேசத்தின், ஆதங்கமும், ஆத்திரமும், தற்போது ஆரம்பமாகியுள்ள ஜெனீவா அமர்வில் மீண்டும் எதிரொலிக்குமெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. 2015 இல் இந்த அரசாங்கம் வந்த கையோடு சர்வதேசத்தின் சில கடப்பாடுகளுக்குகட்டுப்பட வேண்டியிருந்தது.போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்தில் நடத்துதல், காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு,தகவலறியும் சட்டமூலம், புதிய அரசியலமைப்பு, எனப் பல விடயங்களுக்கு 2015 09 22 ஜெனீவா அமர்வில்அரசாங்கம் உடன்பட்டது.வெளிநாட்டு அமைச் சராக இருந்த மங்கள சமரவீர ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் உடன்பாட்டுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
எவராலும் வெல்லப்பட முடியாத தேர்தலை வென்று தந்த கைங்கர்யமாக இதைச் செய்ய வேண்டும். இதுதான்சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு. சிங்கள தேசத்துக்கு எதிரான பல தீயகரங்கள் இந்த எதிர்பார்ப்புக்குப்பின்னாலுள்ளதாகக் கூறுவதும், ஐரோப்பாவுக்கு எதிரான மன உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் மூலதனப்படுத்துவதும், நாட்டைப் பிரிக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் கைவிடப்படவில்லையென்ற பீதியைத் தெற்கில்பரவவிட்டு அரசியலில் நிலைப்பதுமே மொட்டு அணியின் "ரெடிமேட்" திட்டம்.
தற்போதைய ஜெனீவா அமர்வுகளும் அங்கு நிகழவுள்ள நிரல்களும் மஹிந்த தரப்பு க்கு வாய்ப்பாகலாம்.இந்தவாய்ப்புக்களின் வாடைகள் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவுக்கு நம்பிக்கையூட்டிற்று.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புடன் இணங்கிய விடயங்கள்உள்நாட்டு சிவில் யுத்தம் நடைபெற்ற நாடுகளில் கட்டாயம் அமுல் படுத்தப்பட வேண்டியவையே. இந்தஅமுலாக்கம் எவருக்கும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாதென்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமைகள் என்ன? யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பொது மக்களுக்குநடந்த கதியைப்பற்றி கண்டறிவதா?அல்லது போரில் ஈடுபட்ட இரு தரப்பிலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப்பரிகாரம் தேடுவதா என்பதில் குழப்பங்கள் உள்ளன.பொது மக்களைத் தேடுவதானால் தமிழர்களை மட்டுமல்லசிங்களவர்களையும், தேட வேண்டும். இவர்கள் கடத்தப்பட்டனரா? கொல்லப்பட்னரா? சித்திரவதைக்குள்ளாகினரா?யாரால் இக்குற்றங்கள் இழைக்கப்பட்டன. போரில் நேரடியாக ஈடுபட்ட புலிகளைத் தேடுவதானால்,இராணுவத்தினரையும் தேட வேண் டும். இதுதான் மஹிந்த தரப்பு 2015 க்குப் பின்னர்கையாளும் அரசியல் யுக்தி.
எந்தக்கூட்டுத் தன்னை வீழ்த்தியதோ, அந்த அரசியல் கூட்டின் வியூகத்திலுள்ள பாதகங்களை, தேசப்பற்றுக்குஎதிராக்குவது, இராணுவ வீரர்களுக்கு எதிரான சதியாகச் சித்தரிப்பது. இதிலுள்ள கவலை முஸ்லிம்களும்காணாமல் போயுள்ளதாகக் காட்டப்படாமையே. போரியல் குற்றங்கள் படையினரால் மட்டும்செய்யப்படவில்லை எனவும்,புலிகளும் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில் ஒன்றைச் சிந்திக்க வேண்டி உள்ளது. அமெரிக்கா,ஐரோப்பாவைப் பொறுத்த வரை புலிகள் அமைப்புபயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்பட்டது. எனவே பயங்கரவாத அமைப்பிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியாது?சட்ட நடவடிக்கை எடுக்கவும் இயலாது.ஒரு குறுகிய எல்லைக்குள் புலிகள் நடத்திய அரசாங்கத்தைசர்வதேசம் ஏற்றுக்கொள் ளவும் இல்லை.இதனால் சட்ட அந்தஸ்துப்பெறாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் எந்தநடவடிக்கையும் எடுக்கவும் முடியாது.
இது மஹிந்த தரப்புக்கு தெரியாத விடயமில்லை.ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்று செயற்படும், சுரேந்திரன்,ருத்ரகுமார், மாணிக்கவாசகன் ஆகியோரை புலிகளின் பிரதிநிதிகளாக விசாரிக்க வேண்டும். ஐரோப்பா இவர்களின்அரசை ஏற்பது, இலங்கையின் ஆள்புலத்துக்கு ஆபத்து என்பதே அவர்களின் வாதம். இந்த விவாதங்களின்யதார்த்தத்தால் கவரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 2015 க்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் மிக முக்கிய தீரமானத்திலிருந்து விலகிக் கொண்ட நிகழ்வாக இது கருதப்படுகிறது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுத்த, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் சிலதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக,கடந்தவாரம் ஜனாதிபதி ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -