மதனியா பெண்கள் அரபுக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் கட்டிடம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோப்பூர் மதனியா பெண்கள் அரபுக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டிடமானது இன்று (04) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அரபுக் கல்லூரி அதிபர் ஏ.எச். அஷ்ஷெய்க் ஜரூஸ் மௌலவி தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் உரிய திட்டம் கம்பரெலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் திறப்பு விழா நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளரா ஈ.எல்.அனீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா சேரவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.அன்வர் முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.நிஸ்மி, தோப்பூர் வட்டார தலைவர் முஜாஹித் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -