அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எல்லோருக்கும் பொதுவான கட்சி-அப்துல்லா மஹ்ரூப்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவான கட்சி இன மத பேதமற்ற எல்லோரையும் அரவனைக்கும் கட்சி என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

மூதூர் பள்ளிக் குடியிருப்பு பகுதியில் இன்று (10) இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்
அபிவிருத்தியிலும் சரி எந்த விதமான முன்னெடுப்புக்களிலும் சரி தமிழ் , முஸ்லீம்,சிங்கள இன மத பேதமற்ற சேவைகள் எமது கட்சியினால் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

புதிய வரவு செலவு திட்டம் ஊடாக பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைப்பேன் கல்வி,சுகாதாரம், போக்குவரத்து,விவசாயம்,மீன்பிடி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு மிகவும் பாரிய பங்களிப்புக்களை செய்யவே இவ்வாறான குழுக்கள் உருவாக்கப்படுகிறது கடந்த கால யுத்த சூழ் நிலையின் போது பாதிக்கப்பட்ட கிராமம் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் .

சமூக நலனுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது தேசிய மட்டத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த பெருமை இக் கட்சிக்கே உரித்தானது தேசிய தலைமை தான் உட்பட கட்சி வளர்ச்சிக்காகவும் சமூக ஒற்றுமைக்காகவும் ஒன்று பட
வேண்டும்.


கட்சியின் உயிரோட்டம் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது இதனால் எதிர்கால திட்டமிடல்களும் கிராமிய அபிவிருத்திகள் ஊடாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
2019 ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் கிண்ணியாவில் கைத்தொழில் பேட்டை வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் பாரிய வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கவுள்ளது இதனால் எமது இளைஞர்கள் பலர் நன்மையடைவார்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -