ஆழ்ந்து நிம்மதியாக தூங்குவதையே விரும்பமாகக் கொண்டவர்கள் 75% இளைஞர்களே-ஆய்வின் முடிவு

 ந்தியாவில் தூக்கம் குறித்து இளைஞர்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச தலைவர் ராயல் பிளிப்ஸ் வெளியிட்டுள்ளார்.

அதில், 73 சதவீதம் பேர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆவலாக உள்ளதாகவும், 55 சதவீதம் பேர் நிம்மதியாக தூங்குவதாகவும் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் 38 சதவீத இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் தூக்கம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 31 சதவீதம் இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக கூறியுள்ளனர். மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88), லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது. 


இந்தியாவில் தூக்கத்தின் ஆரோக்கியம், முக்கியத்துவம் மற்றும் சதவீதத்தினை அதிகரிக்க பிலிப்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில் சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 11,006 பேரிடம் இது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -