தம்பலகாம பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் மக்கள் பாவனைக்கு

 -பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்
ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (12) திறந்து வைத்தார்.

தம்பலகாம பிரதேச செயலக பிரிவின் பொற்கேனி,மீரா நகர் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் ,வடிகான்கள் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அபிவிருத்தி திட்டங்களை கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.

இவ் புதிய அபிவிருத்தி நிகழ்வுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார வேட்பாளர்களான ஆபிலூன், ஏ.சீ.நஜிமுதீன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -