நுஜா ஊடக அமைப்பினால் தமிழக ஊடகவியலாளர் சாஹூல் ஹமீத் கௌரவிப்பு

றியாத் ஏ. மஜீத்-தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 2019ம் ஆண்டுக்கான முதலாவது விசேட ஒன்றுகூடலும்,கௌரவிப்பு நிகழ்வும் இன்று (19) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது வுளு சேன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தவிசாளர் றியாத் ஏ. மஜீத் நெறிப்படுத்தலில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் செயலாளரும், பிரதித் தலைவருமான சிரேஷ்டசட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, தமிழக ஊடகவியலாளர் எம்.கே.சாஹூல் ஹமீத் உள்ளிட்டஅமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விசேட கூட்டத்தில் ஒன்றியத்தின் சமகால முன்னெடுப்புக்கள் மற்றும் 2019ம் ஆண்டுக்கான செயற்பாடுகள்தொடர்பில் ஆராயப்பட்டது.

நிகழ்வின் விசேட அம்சமாக இலங்கை - இந்தியா ஊடகவியலாளர்களின் உறவுப் பாலமாக செயற்படும்இந்தியாவின் திருச்சி நகரைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே. சாகுல் ஹமீத் நிகழ்வின் அதிதிகளால்பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -