ஜனாதிபதியின் ஆலோசனைக்கும், அறிவுருத்தல்களுக்கும் அமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வருகின்ற ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், கிராம சக்தி சங்கத் தலைவர்கள் ஆகியோர்களுக்கான ஒன்று கூடலும், கலந்துரையாடலும் நேற்று (06) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும், அந்தத் திட்டங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது? அதன் நோக்கம் என்ன? ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், கிராம சக்தி சங்கத் தலைவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என்று ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட வட கிழக்கு கருத்திட்ட உத்தியோகத்தர் ஐ.வேலாயுதமினால் எடுத்துரைக்கப்பட்டது.