மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரபணபவன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் முயற்சியின் பயனாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு 3500 க்கும் மேற்பட் தமிழ்,ஆங்கில நூல்கள் வழங்குவதற்கான உறுதிப்பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த (9) வெள்ளிக்கிழமை; மட்டக்களப்பு மாநகர முதல்வரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் விசேட முயற்சியின் பயனாக சிங்கப்பூர் தேசிய நூலக சபை மேற்படி நூல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி மற்றும் மாநகர சபை எதிர் கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகான சிங்கப்பூரின் அனுபவங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
