அகமட் எஸ்.முகைடீன்-
கல்முனை பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் சீருடை (ஜேசி) அறிமுக நிகழ்வு கல்முனை இக்பால் கழக கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) அவ்விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். லாபீர் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து சீருடையினை அறிமுகம் செய்துவைத்த இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எல்.எம். நைஸர் உள்ளிட்ட பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த விளையாட்டுக் கழகத்திற்கு பிரதி அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு முன்னதாக பிரதி அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதியினை இதன்போது வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின்போது பிரதி அமைச்சர் ஹரீஸின் சேவையினை பாராட்டி பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.