புதிய காத்தான்குடி கர்பலா உள்ளக வீதி அபிவிருத்தி தொடர்பில் மக்கள் சந்திப்பு


ஆதிப் அஹமட்-

கர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெருமுயற்சியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் "கம்பரெலிய" கிராம அபிவிருத்தி திட்டமூடாக 20 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்படவுள்ள கர்பலா உள்ளக வீதியில் வசிக்கும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் கலந்து கொண்ட மேற்படி கலந்துரையாடலில் இவ்வீதி வேலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக மக்கள் செய்துகொள்ளவேண்டிய அவசியமான விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இந்நிகழ்வில் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் இணைப்பாளர் டீ.எம்.தெளபீக் JP உற்பட மேற்படி வீதியில் வசிக்கும் பொதுமக்கள்,பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் இவ்வேலைத்திட்டத்தை கொண்டுவந்த பிரதியமைச்சர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் அவர்களுக்கும் தங்களின் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -