வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரை வழங்குமாறு நோயாளர்கள் கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாதிவுல்வெவ
பிரதேச வைத்தியசாலைக்கு அதிகளவிலான நோயாளர்கள் வருகை தருவதாகவும் நோயாளர்களை விடுதியில் நிறுத்தி சிகிச்சைகளை வழங்கி வருகின்ற நிலையில் நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீர் இன்மையினால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு வைத்தியர் உட்பட சக ஊழியர்களால் எவ்வித குறையுமின்றி சேவைகள் வழங்கப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதுகுடி நீர் வழங்கப்படுவதில்லை எனவும் குடிப்பதற்கு உகந்த நீர் வழங்கப்படாமையால் நோயாளர்கள் அவதியுற்று வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மஹாதிவுல்வெவ வைத்தியசாலையை நம்பி ஹொரவ்பொத்தானை மற்றும் கோமரங்கடவல பகுதிகளைச் சேர்ந்த அதிகளவிலான நோயாளர்கள் இவ் வைத்தியசாலைக்கு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

தற்பொழுது அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளை விடவும் இவ் வைத்தியசாலை மிகவும் திறன் பட்டு செயற்படக்கூடிய வைத்தியசாலையாக காணப்படும் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் குடிப்பதற்கு நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லாமலேயே காணப்படுவது மிகவும் கவலையை ஏற்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் நோயாளர்களின் நலன் கருதி சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -