சிறு'war' பாட்டு (கவிதை)


சிறு'war' பாட்டு
++++++++++++
Mohamed Nizous

குடை பிடித்து செருப்புமிட்டு
புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

கலிகாலம் கயவருண்டு
மிகக் கவனம் மக்காள்
பிழையாக யாரும் 'தொட்டால்'
விலகி விட வேண்டும்

ஓட்டோக்கள் குறுக்கால் வரும்
ஓட வேண்டாம் மக்காள்
வீட்டாட்கள் இல்லாரிடம்
வேண்டி உண்ண வேண்டாம்

கண்மணிகாள் போஸ்டர்களில்
காட்சி பார்க்க வேண்டாம்
என்ன யார் கேட்டாலும்
பின்னர் சொல் வீட்டில்.

புத்தகப் பை தரச் சொல்லி
போகும் வழியில் கேட்டால்
ஒற்றை சொல்லில் இல்லையென்று
உடனே சொல்லி செல்லு.

வாகனத்தை நிற்பாட்டி
வா போக என்றால்
வேகமாக அவ்விடத்தை
விலகி விட வேண்டும்

வீட்டுக்கு வந்த பின்னால்
வீதியிலே நடந்ததை
பாட்டியிடம் அம்மாவிடம்


பயமின்றிச் சொல் கண்ணே

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -