காத்தான்குடியை போதைப் பொருள் பாவனை அற்ற நகரமாக்க நகரசபை முதல்வர் S.H.M.அஸ்பர் J.P அழைப்பு..



எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி நகர சபையின் 8வது அமர்வு இன்று 30.08.2018 வியாழக்கிழமை நகரசபை மண்டபத்தில் நகர முதல்வர் SHM அஸ்பர் JP தலைமையில் இடம் பெற்றது.
இன்றைய அமர்வில் உரையாற்றிய கெளரவ முதல்வர் எமது காத்தான்குடி நகரத்தை
போதைப் பொருள் பாவனை அற்ற நகரமாக மாற்ற நகர சபையின் அணைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இன்றி ஒத்துழைக்க வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்தார்.

எமது பிரதேசத்தில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை முற்றாக அழிக்கவேண்டியது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எம் அனைவரின் மீதும் கடமையாகும்.

இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போதைப் பொருள் பாவனை அற்ற நகரமாக மாற்ற அணைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு நகரமுதல்வரால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இன்றைய சபை அமர்வில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -