காரைதீவு நிருபர் சகா-
கல்முனையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துதென்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம் நடாத்திய ஒருசில நிமிடங்களில் மக்கள் வழங்கிய தகவலையடுத்து ஒருவர் கையும்மெய்யுமாக பிடிப்பட்டார்.
கல்முனை 2 பி குறிச்சி குவாரி வீதியிலுள்ள ஒரு குடும்பஸ்தரே இவ்விதம் கஞ்சாவுடன் மாட்டியவராவார்.
கல்முனை 1 சி பிரிவிலுள்ள மாமாங்கப்பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள சனசமுகநிலையக்கட்டடத்தில் மாதர்சங்கத்தினரால் இக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமை வகித்த இக்கூட்டத்தில் கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்றவியல்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சங்கரப்பிள்ளை செல்வராஜா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்றவியல்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சங்கரப்பிள்ளை செல்வராஜா கலந்துகொண்டு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக விளக்கமளித்ததுடன் யாராவது அந்தப்பாவனையில் ஈடுபட்டாலோ அல்லது வைத்திருந்தாலோ தனக்கு தெரியப்படுத்துமாறு கூறி தனது கையடக்கத்தொலைபேசி இலக்கத்தையும் வழங்கிவிட்டுச் சென்றார்.
கூட்டம் கலைந்து ஒருசில நிமிடங்களுள் அவரது தொலைபேசிக்கு ஒரு தகவல்கிடைத்தது. இந்த இடத்தில் கஞ்சா பாவனை இடம்பெறுவதாக. மறுகணம் பொலிஸ் பொறுப்பதிகாரி செல்வராஜா ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டதால் ஒருவரை கஞ்சாக்கட்டுடன் கையும் மெய்யுமாக கைதுசெய்யமுடிந்தது.
அவரை கல்முனை நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கல்முனையில் விரைவில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தமுடியும் என்றும் பொறுப்பதிகாரி ச.செல்வராஜா தெரிவித்தார்.
கூட்டம் கலைந்து ஒருசில நிமிடங்களுள் அவரது தொலைபேசிக்கு ஒரு தகவல்கிடைத்தது. இந்த இடத்தில் கஞ்சா பாவனை இடம்பெறுவதாக. மறுகணம் பொலிஸ் பொறுப்பதிகாரி செல்வராஜா ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டதால் ஒருவரை கஞ்சாக்கட்டுடன் கையும் மெய்யுமாக கைதுசெய்யமுடிந்தது.
அவரை கல்முனை நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கல்முனையில் விரைவில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தமுடியும் என்றும் பொறுப்பதிகாரி ச.செல்வராஜா தெரிவித்தார்.