காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்


காத்தான்குடி, மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடையே நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர், உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலய பொறியியலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள 8 மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும், நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 4 மாடிக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன், பாடசாலையில் தற்போதுள்ள நூலகத்தை விரிவுபடுத்தல், பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா, வாகன தரிப்பிடம் மற்றும் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -