காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்

பாறுக் ஷிஹான்-
காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று(7) ஆரம்பித்திருந்தனர்.

காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றிருந்தது.
வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப் போராட்டத்தின் போது மாலை நான்கு மணியளவில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஈடுபட்டதுடன் தேங்காயைகளை உடைத்தும் கற்பூர தீச்சட்டிகளும் எடுத்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -