சாதனை மாணவி சியாமா சுஹாவுக்கு குவியும் பாராட்டுக்கள்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல சர்வதேச கணித வினாடி வினாப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி சித்தீக் சியாமா சுஹா தன்னுடைய திறமையினை வெளிக்காட்டி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

நாட்டிக்கும் பிரதேசத்துக்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துத் கொடுத்துள்ள குறித்த மாணவிக்கு அரசியல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவ சமூகத்தினர், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு குறித்த மாணவி இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டி ஈருலகிலும் வெற்றிபெற தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -