இளம் சிறார்கள் மத்தியில் முழு கிழக்கிலங்கை மாணவர்களுக்கும் சதுரங்க விளையாட்டினை அறிமுகப்படுத்தி சர்வதேச தரத்தில் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை வழங் கும் நோக்கில் ஸாஹிராவின்
ஆறு தொடக்கம் பதினொரு வயது மாணவர்களையும் பன்னிரண்டு தொடக்கம் பதினாறு வயது மாணவர்களை இருதரப்பினராக பிரித்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றது.
பங்குபற்றிய அனைத்து மாணவர்களையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் நிகழ்வின் பிரதம அதீதியும் ஸாஹிரா கல்லூரியின் முதல்வருமான அதிபர் எம்.எஸ். முஹம்மட் அவர்களின் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு அதீதிகளாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் அஸீஸ் ஆசிரியர், கல்முனை பஹ்ரியா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஸலாம் ஆசிரியர் மற்றும் டிஎம்கே அஸோசியேட்ஸ் தலைவவர் கலீல் எஸ் முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரஷ்யாவின் கேர்ஸ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவரும் ஸஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தின் தலைவருமான அஸ்ஜத் அவர்களின் தலைமையில் இடம்பெற் நிகழ்வில்
அமைப்பின் அங்கத்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.