ஸஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சதுரங்க சுற்று!

ஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் இடம்பெரும் செஸ் சம்பியன் சுற்றுப் போட்டியின் இரன்டாவது முறையாக ஏற்பாடாகி இடம்பெற்ற போட்டிகள் நேற்று (22.07.2018) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இளம் சிறார்கள் மத்தியில் முழு கிழக்கிலங்கை மாணவர்களுக்கும் சதுரங்க விளையாட்டினை அறிமுகப்படுத்தி சர்வதேச தரத்தில் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை வழங் கும் நோக்கில் ஸாஹிராவின்
ஆறு தொடக்கம் பதினொரு வயது மாணவர்களையும் பன்னிரண்டு தொடக்கம் பதினாறு வயது மாணவர்களை இருதரப்பினராக பிரித்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

பங்குபற்றிய அனைத்து மாணவர்களையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் நிகழ்வின் பிரதம அதீதியும் ஸாஹிரா கல்லூரியின் முதல்வருமான அதிபர் எம்.எஸ். முஹம்மட் அவர்களின் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு அதீதிகளாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் அஸீஸ் ஆசிரியர், கல்முனை பஹ்ரியா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஸலாம் ஆசிரியர் மற்றும் டிஎம்கே அஸோசியேட்ஸ் தலைவவர் கலீல் எஸ் முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரஷ்யாவின் கேர்ஸ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவரும் ஸஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தின் தலைவருமான அஸ்ஜத் அவர்களின் தலைமையில் இடம்பெற் நிகழ்வில்
அமைப்பின் அங்கத்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -