கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் விற்பனை நிலையம் மட்டுவில் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு




கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விற்பனை நிலையம் மற்றும் காட்சிக் கூட கட்டிடம் என்பன நேற்று சனிக்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. 

உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகல்லாகம பிரதம அதிதியாகவும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விற்பனை நிலையத்தினை இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -