”சாய்ந்தமருது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா 2018 ” பிரதம அதிதி தொழிலதிபர் எம்.எஸ்.முபாறக்

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த ”சாய்ந்தமருது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா 2018 ” கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இன்று ( 6 ) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.முபாறக் பிரதம அதிதியாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர்களான கங்கா சாகரிக தமயந்தி , எஸ்.எம்.எம்.லத்தீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோஸ்தர் எம்.ரீ.எம்.ஹாறூன் , அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரியுமான இஸட்.எம்.ஸாஜித் , கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத் , சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத் தலைவர் எம்.வை.எம்.றகீப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ் இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகளிலும் ,சகலதுறை சம்பியன்களாகவும் மருதூர் மெய்வல்லுனர் நட்சத்திர அணி தெரிவு செய்யப்பட்டது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -