அருண ரத்நாயக்க-
மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் 08-07-2018 திகதியன்று இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.. நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ஆர். இராஜாராம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப், 'ட்ரஸ்ட்' நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட தோட்ட அதிகாரிகள், கலந்து கொண்டார்கள்.