மலரும் ஈகைத்திருநாள் சமாதான சகவாழ்வுக்கு அடித்தளமிடட்டும்..


கைத்திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈதுல்பித்ர் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அமல்கள் பலபுரிந்து அல்லாஹ்த்தஆலா விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி இறையச்சமிக்க மனிதர்களாய் மாறி நிற்கும் நாம் இப்புவியில் அமைதியும் சமாதானமும் நிலவ பிரார்த்தனை புரிவோம்.
ஏழைகளின் பசியுணர்ந்து பித்ரா எனும் தர்மம் செய்து அனைவரும் இன்புற்றிருக்க நபிவழி நடப்போம்
எமது நாட்டில் வாழும் பல்லின சமூகங்களோடு சமாதானமாக வாழ்ந்து வரும் நாம் ஏனைய சமூகங்களினதும் நலன்களிலும் கவனம் செலுத்தும் அதேவேளை இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் துஆ செய்வோம்.
மேலும் எமது தாய்நாட்டில் வாழும் சகோதர இனங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பி எமது நாட்டினதும் உலக மக்களினதும் நல்வாழ்க்கைக்காக எம்மை அர்ப்பணிக்க திடசங்கற்பம் பூணுவதன் மூலம் இப்பெருநாளை கண்ணியப்படுத்துவோமாக.

அன்புடன்
கெளரவ அல்ஹாஜ் காதர் மஸ்தான் எம்.பி,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -