சேருநுவரப் பகுதியில் வடிசாராயம் காய்த்த மூவர் பொருட்களுடன் கைது


எப்.முபாரக்- 
 திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவில் வடிசாராயம் காய்த்த மூவரை திங்கட்கிழமை(25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருநுவர,காவந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 34,46,மற்றும் 48 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர்கள் சேருநுவர காட்டுப்பகுதியில் வடிசாராயம் காய்ந்து வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் வடிசாராயம் காய்ச்ச பயன்படுத்திய ஐந்து பரல்கள்,பத்து கிலோ கோடா மற்றும் சீனி பதினைந்து கிலோ குழாய் வட்டை,போன்வற்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு செவ்வாய் கிழமை (26) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -