திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவில் வடிசாராயம் காய்த்த மூவரை திங்கட்கிழமை(25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருநுவர,காவந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 34,46,மற்றும் 48 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர்கள் சேருநுவர காட்டுப்பகுதியில் வடிசாராயம் காய்ந்து வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் வடிசாராயம் காய்ச்ச பயன்படுத்திய ஐந்து பரல்கள்,பத்து கிலோ கோடா மற்றும் சீனி பதினைந்து கிலோ குழாய் வட்டை,போன்வற்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு செவ்வாய் கிழமை (26) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
திருகோணமலை
/
சேருநுவரப் பகுதியில் வடிசாராயம் காய்த்த மூவர் பொருட்களுடன் கைது