ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பூரண அனுசரணையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் மத்திய குழு ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஷித் தலைமையில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்ட உலமாக்கள், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.