யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் நஷ்டஈடு

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடி கிழுறிய்யா மற்றும் குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாசல்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இலப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த நஷ்டஈட்டு நிதியை காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்து அவற்றை அபிவிருத்தி செய்ய பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது காத்தான்குடி கிழுறிய்யா மற்றும் குலபாஉர் ராஷிதீன் ஆகிய பள்ளிவாசல்களுக்கு முதற்கட்ட நஷ்டஈடாக தலா இரண்டரை இலட்சம் ரூபா பெற்றுக்கொடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -