செமட்ட செவண வீடமைப்புத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ் அபிவிருத்தித்திட்டமானது
இன்று ஏறாவூரில் இரண்டு மாதிரிக் கிராமங்களை அடையாளப்படுத்தி (ஸகாத் கிராமத்தில் 22 வீடுகளும் ஸம்ஸம் கிராமத்தில் 21 வீடுகளும் ) மொத்தமாக 43 வீடுகள் கையளிக்கப்பட்டது.
இத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 பிரதேசங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மேற்பார்வையில் அப்பிரதேச பிரதேச செயலகத்தினால் வீடுகள் தேவைப்படுவோரை அடையாளப்படுத்தி சிறந்த முறையில் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் வீட்டின் மொத்தப்பெறுமதி ஏழரை இலட்சமாகும். இதில் ஐந்து இலட்சம் அரசாங்கத்தினராலும் மீதி குடியிருப்போரின் பங்களிப்பாகும் .
அதன் அடிப்படையில் இன்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் கடற்தொழில்,நீரியல்வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் M.S.M.அமீர் அலி தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யது அலிஸாஹிர் மௌலானா ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் I.வாஸித்
மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.