
ஐ. ஏ. காதிர் கான்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் உலமாக் கட்சியின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழா, அண்மையில் கொழும்பு - மருதானையில் நடை பெற்றது. இதன் போது கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் உரையாற்றுவதையும், கட்சியின் செயலாளர் மௌலவி அஸ்வர் பாக்கவி, பொருளாளர் அர்ஷாத், செந்தமிழ் கவிஞர் தாஜ்மஹான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான மௌலவி நசீர் அஹமத், மௌலவி ஜெஸ்மின் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதையும் காணலாம்.