நீதிபதியின் கார் விபத்து

ஏறாவூர் நிருபர்)ஏஎம் றிகாஸ்-

தொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வுபெற்ற சாரதியொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்திவெளியைச்சேர்ந்த 60 வயதுடைய சன்முகம் பேரின்பம் என்பவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்pயசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக நீதிபதி மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்றுகொண்டிருந்தவேளை சந்திவெளி பிரதேசத்தில் இந்த அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வுபெற்ற சாரதி துவிச்சக்கர வண்டியில் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதியைக்கடந்து எதிரே உள்ள குறுக்கு வீதிக்குச் சென்றவேளை பிரதான வீதியால் பயணித்த நீதிபதியில் காரில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -