பாரிஸில் உள்ள உணவகத்தில் இலங்கையருக்கு வாழ்வெட்டு

லங்கையை சேர்ந்த நபர் ஒருவர் பாரிஸில் உள்ள உணவகத்தில் தனது மனைவியுடன் உணவு உண்டபோது மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :- பாரிஸின் 10 ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தனது மனைவியுடன் இந்திய உணவகங்கள் அமைந்துள்ள பகுதியில் உணவு உண்ண சென்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் முக மூடி அணிந்த இருவர் திடீரென்று அந்த வழியாக புகுந்து குறித்த இலங்கையரை சரமாரியாக வாளால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் குறித்த இலங்கையருக்கு தலை, கழுத்து, மணிக்கட்டு என உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. குறித்த நபர் குற்றுயிராக சரிந்த நிலையில் தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் வாள் வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னமும் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் மாயமான மர்ம நபர்கள் இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் தாக்குதல் தொடர்பில் உறுதியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -