அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் விசேட அதிரடி படையின் பொறுப்பாளருடன் பேச்சு!!


கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் முயச்சி!!!

ண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூர தாக்குதல்கள் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் வேண்டப்படாத சம்பவங்களின் எதிரொலியாக இன்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் இடம்பெற்றுவரும் இன்றயசூழலில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவரும் முஸ்லிம்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் இறுக்கமான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்வதற்கான முயச்சிகளை செய்துவருவதாகவும் அதன் ஒரு கட்டமாக கல்முனை அக்கரைப்பற்று பிரதேசத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையின் பொறுப்பாளர் கேசரவுடன் பேசியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் திகனையில் இருந்து எமக்கு கருத்துத் தெரிவித்தார்.

திகன பிரதேசத்தில் முகாமிட்டுள்ள பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளமன்ற உறுப்பினர்கள், அங்கு சுமூக நிலையை எற்படுத்துவதற்காக பல்வேறு முயச்சிகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -