கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 36 பேர் விசா ரணைகனின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை


பி.எம்.எம்.ஏ.காதர்-
ண்டி,திகண,மடவள ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் செய்வாய்கிழமை(06-03-2018)இடம்பெற்ற பூரண ஹர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மருதமுனை.கல்முனை.நற்பிட்டிமுனை.சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் 36 பேர் விசாரணைகனின் பின்னர் நேற்று(07-03-2018)நல்லிரவு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்;.

மருதமுனையைச் சேர்ந்த 17 பேரை விடுவிப்பதில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்;.றக்கீப் தலைமையில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஏ.எம்.பதுறுததீன்,அமீறுள் அன்ஸார் மௌலானா,ஆகியோருடன் இளம் சட்டத்தரணிகளான ஏ.ஜி.பிரேம் நவாத்,ஏ.எல்.றிபாஸ்,நூறுல் அமீன் அஸாம்,அநோஜ் பிர்தௌஸ் ஆகியோர் அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டு விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சாய்ந்தமருது,கல்முனை,நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையிலான சட்டத்தரணிகளால் விடுவிக்கப்பட்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -