நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகாலச் சட்டம் அமுல்

நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலமையை பிரகடணப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று (06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி வௌியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -