அம்பாறைக்கு அதிரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரிஷாத் குழு



சப்னி அஹமட்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமானரிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழு சற்றுமுன் அம்பாறைபிரதேசத்திற்கு அதிரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

நேற்று அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாயல்,முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டது இதனைத்தொடந்துஉடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நேற்று இடம்பெற்றஅமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன்பிரதமரிடம் எத்திவைத்து உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அதன் பின் நேற்றுமாலை உடனடியாக ஸ்தளத்திற்கு விரைய முற்பட்டாலும்காலநிலை சீர்கொள்ளாத நிலையினால் அங்கு செல்லவில்லை.இதனைத்தொடந்து இன்று காலை அப்பிரதேசத்தின் நிலையைஅறிய விசேட வாணூர்த்தி மூலமாக சென்றார்கள்.
குறிப்பாக அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் பள்ளிவாயல் மீதுதாக்குதல் மேற்கொண்டதையும் வர்த்தக நிலையங்கள் தாக்குதல்மேற்கொள்ளும் இடங்களை பார்வையிட்டு உடனடியாக அமைச்சர்ரிஷாத் பதியுத்தீன் நடவடிக்கை மேற்கொள்ளவே விரைந்துள்ளார்.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி, அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலிஉள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் மேற்கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -