இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்


பாறுக் ஷிஹான்-
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 2 முஸ்லிம் பெண்களில் ஒருவராகத் தெரிவாகி பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின்னர் இந்த நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.
இவரே ஊவா மாகாணத்தின் முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக நிருவாக சேவைக்குத் தெரிவாகி சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் சிறப்பு முதுமாணிப் பட்டம் பெற்ற இவர், குருத்தலாவை அந்நூர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஐ. அப்துல் நஹீம் மற்றும் ஆசிரியை பழீலா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -