மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!




-ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-


மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இடம்பெற்ற (03) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் சுமார் 20 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலும், மூதூர் மக்களின் விடிவுக்காக எந்த விதமான நடவடிக்கைகளையும், இத்தனை வருட காலமும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளாத நிலையிலேயே, தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் அலையலையாகத் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -