அகமட் எஸ். முகைடீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'மாண்புறும் சாய்ந்தமருது' எழுச்சி மாநாடு கட்சியின் சாய்ந்தமருது தேர்தல் நடவடிக்கைகளுக்கான தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் உபதலைவருமான ஏ.எல்.ஏ. றசீட் (புர்கான்) தலைமையில் இன்று (3) சனிக்கிழமை சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெற்றது.
இவ்வெழுச்சி மாநாட்டிற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், கௌரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ. பசீர், ஏ.சி. எஹ்யாகான், ஏ.ஏ. நசார்டீன், எம்.எம்.எம். பாமி, ஏ.எம். முபாறக் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கடல் அலையென மக்கள் வெள்ளமாக திரண்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் சாய்ந்தமருதுக்கான தீர்வு தொடர்பில் விரிவாக உரையாற்றினார்.
