கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாணகல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்ட்டிருக்கிறது.
ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமுக ஆன்மீகவளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமயவகுப்புகள் மாணவர்க்கு நன்மை பயக்கக்கூடியது எனவே அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
வலயத்திலுள்ள அதிபர்கள் தத்தமதுபாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமுக ஆன்மீகவளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமயவகுப்புகள் மாணவர்க்கு நன்மை பயக்கக்கூடியது எனவே அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
வலயத்திலுள்ள அதிபர்கள் தத்தமதுபாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.