சிதறிய 'சிரிய' பிள்ளை

Mohamed Nizous-

சீறிய குண்டில்
சிதறுண்டு போனார்கள்
சிறிய
சிரியர்கள்

சிதறும் உடல்களும்
கதறும் உறவுகளும்
பதறும் மனங்களும்...
ஒரு
கொலை வெறி பிடித்தவனின்
கொடூரத்தில் விளைவுகள்

'சாம்'ராஜ்ஜியத்தை
'சாம்'பலாக்கும்-அந்தச்
'சாம்'-'பிராணி'
இறுதியில்
சரிவதையும்
எரிவதையும்
சரித்திரம் சொல்லும்.

ஆ'ஷாத்தான் '
அப்பாவிகளை
அழித்தான் என்றும்
அந்தக் கொடியவன்
அதனால் அழிந்தான் என்றும்
எதிர்கால சமூகம்
இவனைப் பழிக்கும்.

அதிகார வெறிக்காக
அனைத்தையும் அழித்தவனின்
வீட்டுக் கதவை
விதி ஒரு நாள் தட்டும்.
ஒரே ஒருவனுக்காக
ஒரு நாடே அழிந்ததை
ஒரு நொடியில்
உணர வைக்கும்.

அந்த
அரக்கன் உரக்க
அலறுவதை
இந்தக் குழந்தைகளின்
இரத்த பாசங்கள்
விம்மலோடு பார்க்கும்.

அநியாயக் காரனின்
அராஜகம் அத்துடன்
அழிந்து போகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -