வேன் - ஸ்கூட்டி விபத்து - இருவர் காயம்


க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மவுஸ்ஸாக்கலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பகுதியிலிந்து சிவனொளிபாதமலையை நோக்கி சென்ற வேன் ஒன்றும் நல்லதண்ணி பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்ற ஸ்கூட்டி சைக்களும் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 04.02.2018 அன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஸ்கூட்டி சைக்களில் பயணித்த இருவரே சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -