நகர சபையின் பணியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகர சபைக்கு சிறந்த பணியினை வழங்கிய ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக் கிழமை (19) கிண்ணியா நகர சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய என்.எம். நௌபீஸ் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இதன் போது சிறந்த திண்மக்கழிவு அகற்றல்செயற்பாடு,சிறந்த வடிகான் துப்பரவுசெயற்பாடு,சிறந்த மின்னிணைப்புசெயற்பாடு,அதிக விடுமுறைஇன்றி வேலை செய்தமை,சிறந்தமேற்பார்வை செய்தமை,
சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துவம்,
சிறந்த பசளை தயாரிப்பு முகாமைத்துவம்,
சிறந்த வாகன பராமரிப்பு,போன்றவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது
மேலும் செயலாளரினால் ஊழியர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும், கேட்டுக் கொள்ளப்பட்டது வினைத்திறன் மிக்க சேவைகள் பாராட்டு விழா வரலாற்றில் இதுவே முதற் தடவையாகவும் கிண்ணியா நகர சபையில் கருதப்படுகிறது...மக்களுக்கான சிறந்த முன்னெடுப்புக்கள் மக்களின் சிறந்த சுகாதார மேம்பாடுகளை மேன்மைப்படுத்த அளப்பெரிய பங்காகும் உங்களது சேவை தொடர்ந்தும் மக்களுக்கு எனது வழிகாட்டலின் கீழ் செயற்படுவீர்கள் என நம்புகிறோம் எனவும் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தனது உரையின்போது தெரிவித்தார்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -