சம்மாந்துறை பிரதேசம் முழுவதும் ஒருநாள் விசேட டெங்கு சிரமதான வேலைத்திட்டம்




யு.எல்.எம். றியாஸ்-
ம்மாந்துறை பிரதேசம் முழுவதும் ஒருநாள் விசேட டெங்கு சிரமதான வேலைத்திட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திடத்தினை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளம்,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 உயர்நிறுவனங்கள் பொது அமைப்புக்கள் கூட்டாக சம்மாந்துறை பிரதேசம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்ற இவ் வேலைத்திடடத்தின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

அதைனைத் தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு நடைபவனி ஒன்றும் ஹிஜ்ரா சந்தியில் இருந்து பிரதான வீதிவழியாகஇடம்பெற்றதுடன் புகை விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது

அதைத் தொடர்ந்து வீடுவீடாக சென்று டெங்கு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட்து.

இச் சிரமதான வேலைத்திடடத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம். ஹனீபா ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -