பாம் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதி அபிவிருத்திப்பணிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு




ஆதிப் அஹமட்-

கர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினுடைய வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமில் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் 17 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள புதிய காத்தான்குடி பாம் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(09.11.2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும் கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை உட்பட முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -