எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயற்படும் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் சேவை கட்சி மற்றும் ராணுவ உரிமைகளை பாதுகாக்கும தேசிய அமைப்பு என்பன எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்காக ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
