கல்முனையில் 6 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி பணிகள்


எஸ் .எல். அப்துல் அஸீஸ்-

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி விசேட வேலைத்திடடத்தின் கீழ் கல்முனையில் 6 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்படடன.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமாகிய எம்.எஸ். ரஸாக்கின் முயற்சின் நிமிர்த்தம் நிதிகள் பெறப்பட்டு சாஹிப் வீதி 3ஆம் குறுக்கு(1மில்லியன்), மதராச வீதி கிழக்குப்பகுதி(1.5மில்லியன்), மதராச வீதி 4ஆம் 8ஆம் குறுக்குகள்(1.5மில்லியன்), அலியார் வீதி 2ஆம் குறுக்கு(2மில்லியன்) ஆகிய வீதிகளின் அபிவிருத்தி பணிகளே ஆரம்பித்து வைக்கப்படடன.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமாகிய எம்.எஸ். ரஸாக்கின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் ஹனி, ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை பிரதேச உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.முகீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -