ஒட்டமாவடியில் இரண்டு வாரங்களில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை

ட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் திருட்டுச் சம்பவத்தை குறைக்கும் வகையில் உடனடியாக வீதி மின்விளக்குகளை பொருத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரிடம் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எஸ்.எம்.எம்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் மற்றும் பிரதியமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சில பழுந்தடைந்து காணப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இரவு நேர போக்குரத்துக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவில் உள்ள வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் தங்களது இரவுகளை கழித்து வருகின்றனர்.

அத்தோடு வீதிகள் இருளில் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேர போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -