உள்ளூராட்சிசபைத் தேர்தல்- தேசிய காங்கிரஸ் வேட்பாளர் விண்ணப்பம் கோரல்


எம்.ஜே.எம்.சஜீத்-

திர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தேசிய காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமது கட்சி ஆயத்தமாகவுள்ளது. தற்போது நாம் வேட்பாளர் விண்ணப்பங்களையும் கோரியுள்ளோம்.

தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்கு விரும்புபவர்கள் கீழ்க்குறிப்பிடப்படும் மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 2017.11.25ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் (தேர்தல் பணி) தேசிய காங்கிரஸ், கிழக்கு வாசல், அக்கரைப்பற்று எனும் முகவரிக்கு அனுப்புமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு - 0773178783 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -