உள்ளுராட்சித் தேர்தலை நடத்தும் திகதி ..

ள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் 22ம் திகதி மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது.

எனினும் அது அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அது குறிப்பிட்ட சில உள்ளுராட்சி மன்றங்களுக்கே பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று கூடவுள்ள கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இன்றையதினம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி அநேகமாக எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -